கடி ஜோக்ஸ்
1. "உன் மாமியார் அடிக்கடி ஆஸ்பத்திரிக்குப் போய் எதுக்கு வாயில் தையல் போட்டுக்கறாங்க...?" "அவங்கதான் வாய் கிழியப் பேசுவாங்களே!" வி.சாரதி டேச்சு 2. "காதலர்கள் ஏன் எப்பவும் பொய்யே பேசுறாங்க?" "அவங்க "மெய்" மறந்து காதலிக்கிறவங்களாச்சே!" கூடல் 3. "எதையும் காசு கொடுத்து வாங்கினாத்தான் ஒட்டும்...." "அதுக்காக ஓசியில வாங்கின பசை கூடவா ஒட்டாது....?" ப.விஜயகுமார் 4. "தலைவர்கிட்ட யார் கடன் கேட்டாலும், வட்டி பிடிச்சிக்கிட்டுத்தான் தருவார்..." "மகளிர் அணித் தலைவி கேட்டா...?" "கட்டிப் பிடிச்சிக்கிட்டுத்தான் தருவார்!" வீ.விஷ்ணுகுமார் 5. "ஊசி போடும்போது கண்ணை மூடிட்டீங்களே.... மனசுல சாமியை நினைச்சுக்கிட்டீங்களா?" "இல்ல டாக்டர்.... நர்ஸை நினைச்சுகிட்டேன்....!" 1. "என்னப்பா சர்வர்... வெளியில மெனு போர்டுல "தயிர்வடை"ன்னு எழுதறதுக்குப் பதிலா "தயிர்வாடை"ன்னு தப்பா எழுதியிருக்கு..?" "சரியாதான் எழுதியிருக்கு.... தயிர்வடை போட்டு ஒரு வாரம் ஆகுதே!" பீ.என்.நரசிம்மமூர்த்தி 2. "இளவரசர் தோற்றத்தில் மன்னர் போலவே உள்ளார்..." "தோற்றத்திலா... அல்லது தோற்றதிலா" எம்.அசோக்ராஜா 3. "அவர் சீலிங் ஃபேன் ரிப்பேர் பண்றவர்னு எப்படிச் சொல்றே..?" "எப்போ கேட்டாலும், "தலைக்கு மேல வேலை இருக்கு"ன்னு சொல்றாரே!" பீ.என்.நரசிம்மமூர்த்தி 4. "டாக்டர்... ஆபரேஷனுக்கு அப்புறம் ஒரு கஷ்டமும் இருக்காதே..." "இருக்காதுய்யா ... நான் வாங்கின கடனையெல்லாம் அடைச்சிடுவேன்!"கடன்
இளவரசர்