காதல்

 

பள்ளி செல்லும் பிள்ளைகளே 

பள்ளி செல்லும் பிள்ளைகளே.. 
பாடம் படிக்க மறவாதிர். 

சொல்லி கொடுக்கும் ஆசிரியர் மனதில் 
வெறுப்பை கூட கரைக்காதிர். 

உயிரை விட பெரிதென கருதும் 
பெற்றோரை வணங்க மறக்காதிர். 

பாடம் படிக்கும் நேரத்தில் 
பார்வை வேறெங்கும் செலுத்தாதிர். 

பார்வை வேறெங்காவது செலுத்திவிட்டு 
தேர்வு நேரத்தில் விழிக்காதிர். 

கல்வி என்பது அரிதாய் கிடைப்பது 
அதை பாரமென்று நினைக்காதிர். 

எம்மொழி படித்து வென்றாலும் 
நம் தாய் மொழி பேச சிரிக்காதிர்.!? 

எங்கெனும் உங்கள் வெற்றிகள் குவித்தும் 
உங்கள் தாய் நாட்டை 
போற்ற மறக்காதிர்.!

 

 

காதல் ராவணன் 

"நான் சந்தித்து நகையாடிய முதல் பெண் நீ என்று பொய்உர மாட்டான், ஆனால் நகையடியத்தில் முதர்மையான பெண் நீயா என்பேன்", 


"உன்னோடு வாழ இரண்டு ஆயுள் தா என்றேன், இரக்கம் இல்லை இறைவனுக்கு, இரண்டு ஆண்டுகளே கொடுத்தான், 

ஆனால் என்று இரண்டு ஆயிரம் ஆண்டுகள் வாழும் நினைவுகளை என்னுள் நிலை நிறுத்தினாய்", 

"உன்னை சிறை எடுக்க ராவணன் அல்ல, அதனால் தான் உண் நினைவுகளை சிறை எடுக்க என் சிந்தனைகளுக்கு சிறகு கொடுத்தேன், என் இதயம் என்னும் இருட்டறையில் யாரும் காண வண்ணம் அடைக்க"

 

 

 

தாய் காதலி 

கண்ணீரைக் கண்டவுடன் 
துடிப்பது தாயின் உள்ளம்! 
கண்ணீரைப் பொழிந்தும் 
இறங்காதது காதலியின் உள்ளம்! 

ஆனாலும், 
காதலி பிரிந்தால் 
ஏன் இறக்கிறோம்? 
அன்னை பிரிந்தால் 
ஏன் அழுகிறோம்? 

 

 

ITHAYAM 

இரவும் பகலும் 
உறங்காமல் உழைப்பான்... 

அவன் உறங்கினால் 
எழுப்பிட ஆளில்லை...

 

முதிர்கன்னி! 

கூந்தலில் வெளிச்சம் 
வாழ்க்கையில் 
இருட்டு... 

 

 

தூக்கில் தொங்குகிறது? 

தன் காதலை சொல்ல, 
தூக்கில் தொங்குகிறது? 
'என்னவள்' கூந்தலில் -பூக்கள்! 

 

 

Annai 

அன்னை 


அன்று 
பத்து மாதம் 
கருவறையில் 
முத்தை காத்தவள்... 

இன்று 
விலை கொடுத்து 
விற்கப் பட்டாள் 

முதியோர் இல்லத்தில் ... 

 

 

காத்திருக்கிறேன்  

என் கவிதைகளை ரசித்துக்கொண்டிருக்கையில் 
இது யாருக்காக என்று நீ கேட்கும்போதெல்லாம் 
என் இதயம் துடிக்கிறது 
உனக்காக தான் என்று சொல்லடா என..!! 

சொல்லிவிடுவேன்.. 
ஆனால் எனக்காகத்தானே 
என நீ கேட்கும்வரை காத்திருக்கச்சொல்கிறது மனது..!!

 

 

 

 

 

உன் நிழல் புறம் 

சாலையில் எப்போதும் 
வலப் புறமாகச் செல்லும் 
வாகனங்களைப் போல 
நான் எப்போதும் 
உன் நிழல் புறமாகவே நடக்கிறேன்… 
எப்போதும் உன் நிழல் 
என் மீது விழவேண்டும் என்பதற்காக.

 
  

கடிதம் எழுது 

கடிதம் 
எழுது எழுது……. 
எனக்கு ஒரு கடிதம் எழுது….. 

என்னை நேசிக்கிறாய் 

என்றல்ல்…. 
நீ வேறு எவரையும் 
நேசிக்கவில்லை என்றாவ்து 
எழுது!!!

 

காதல் மொழி  

திருமணங்கள் தோல்வியில் முடிவதன் காரணம்.. 
காதல் குறைபாடு அல்ல.. நட்புக் குறைபாடே..

 

ஒரு சூரியன் போதும்  

வெயில் அதிகமாய் இருக்கிறது.. 
உன் முகத்தை மறைத்துக்கொள்.. 
உலகுக்கு 
ஒரு சூரியன் போதும்! 

 

 

 

 

 

​​​​​

Hi2 FM

to listen you must install Flash Player.

​​​​​